Our website provides health tips, general knowledge, education, science, cooking tips, history etc. Our website was created for people.

Facebook

Post Top Ad

சனி, 22 பிப்ரவரி, 2020

கடல் வற்றிவிடுமா...? Will the sea dry up...?

     
ஆறுகள் வற்றினாலும், அருவிகள், அணைகள் வற்றினாலும் கடல் வற்றாது என்றே பலரும் நம்பிக் கொண்டிருக்கின்றனர். மேலும் ஓசோன் படலம் ஓட்டையாகி புவி வெப்பம் அதிகரித்து வருவதால் பனிமலைகள் உருகி தண்ணீராக கடலில் சேர்வதால் நிலப்பரப்பு தான் கடலில் மூழ்கும் என்று சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஆனால் புவி வெப்பம் அதிகரிக்க அதிகரிக்க கடலும் வற்றிப்போகும் என்ற ஒரு கருத்தும் தற்போது நிலவி வருகிறது.                                   அதாவது ஆண்டுகள் ஆக ஆக சூரியனின் வெப்பம் சிறிது சிறிதாக அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இன்னும் சில நூறு கோடி ஆண்டுகளில் சூரியனின் வெப்பம் பேரளவில் அதிகரித்துவிடும். இதனால் பூமியில் கடல் கூட ஆவியாகிவிடும் மட்டுமின்றி புதன், வெள்ளி ஆகிய கிரகங்களில் தண்ணீர் இருந்தால் கூட அவை ஆவியாகிவிடும். அப்போது பூமியில் உயிரினங்கள் முற்றிலும் அழிந்து விடும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

Page Links